Thursday, February 16, 2012

குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கொள்ளை கொள்ளும் உன் அரை கணப் பார்வை
பேரின்பத்தின் அரையினும் மேல்...
குறள் 1091:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

உன் பார்வை தரும் நோய்க்கு உன் பார்வையே மருந்து.


குறள் 1090:
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
உண்டாலே மயக்கமூட்டும் மதுவைப்போல் அல்லாது
உன்னை கண்ண்டாலே மயக்கமூட்டுவது காதல்..



குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

 ஏணி விழியாள், வெட்கத்தை அணிந்தவளுக்கு
அணி என்ன அழகு சேர்க்கும்..??



குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

வெற்றி பல தேடித்தந்த என் வீரம் மிளிரும் அவள்
நெற்றிக்கு முன் தோற்று நிற்கிறது


குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

மதகரியின் முகபடாம்-மங்கையின் கொங்கைமேல் துகில்



குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
வளைந்த புருவங்களை நேராக்கி நின் விழியம்ம்புகளிடம் இருந்து என்னை காப்பாயாக


Tuesday, February 14, 2012

குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னைக் கொல்லும் பார்வையாலே நானுகிறாய்......
நின் விழிகளால் பார்க்கவும் செய்கிறாய்



குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

மென்மையான பெண்மையின் வதனத்தில் உயிருண்ணும் விழிகள். முரண்!


குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


நமனை அறிந்ததில்லை நங்கையின் வடிவில் அவன் விழியம்புகளால் என்னுடன் போர்த்தொடுக்கும் வரை 



குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

 நீ பார்க்கும் பொழுதெல்லாம் உன் அழகிற்கு மட்டுமலாது உன் பார்வைக்கும் அடிமையாகி போகிறேன் நான்




குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.



காதணி அணிந்த மானுடப் பெண்ணோ...அழகிய மயிலோ.. சொர்கத்து தேவதையோ.??
யார் அவள் என குழம்பித்தான் போகிறேன்